சென்னை: ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
இதை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக அவரச சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இன்னும் ஓரிரு நாளில் அவசர சட்டம் இயற்றப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யப்படும். எனவே மாணவர்கள் போராட்டத்தை கை விட வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அவசர சட்டம் போதாது. ஜல்லிக்கட்டுக்கு தடை முழுவதுமாக நீங்க வேண்டும், நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்த தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்று இளைஞர்கள், மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Image may be NSFW.
Clik here to view.