சென்னை: ஆதம்பாக்கம் நிலமங்கை தெருவில் உள்ள டிடிவி தினகரனின் உறவினரான மோகன் என்பவரின் வீட்டில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதில் மோகனின் பணத்திலும் கையாடல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது, மேலும் தொலைபேசி உரையாடலிலும், சில முக்கிய ஆவணங்களிலும் இவருடைய பெயர் இடம்பெற்றிருப்பதால் டெல்லி போலீசார் இவரிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.