தூத்துக்குடி:பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவிற்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், எனவே அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என ஹெச்.ராஜா கூறினார்.
மேலும், இந்திய மக்களை அதிர்ச்சி அடைய செய்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஜூலை 15-ம் தேதி தீர்ப்புக்கு பிறகு தி.மு.கவைச் சேர்ந்த இருவர் டி.டி.வி. தினகரன் போன்று சிறை செல்வது நிச்சயம் என்றார்.